
26 December, 2009
இரட்சிப்பு

15 December, 2009
சிறுமிகள் விழுங்கும் சூரியன்கள்
12 December, 2009
இடமாற்றம்

மஞ்சளாடைச் சிறுமியின் கிண்ணத்து
11 December, 2009
இறகு

முகில்கள் திரண்டிருந்ததோர்முற்பகலில்
பீலிகளற்ற பெண்மயிலொன்று
பூங்காவில் தனித்தலைகையில்
முதன்முதலாய்க் காணலுற்றோம்
13 July, 2009
.........
12 June, 2009
காணாமல் போனவை-4

காணாமல் போனவை- 3

அடிக்கடி வந்தன
ஒரே உறையிலிடப்பட்ட
சில கடிதங்கள்
எவரது எதுவென்றெல்லாம்
கேள்வி யெழுப்பாமல்..
தாத்தாவின் காகிதத்தில்
நாயின் கால்
வலப்புறம் தனித்தும்
புறாவினது இடப்புறம்
சுழன்று மிருக்கும்.
நுணுக்கி எழுதும்
அம்மாவின் கடிதம்
அவ்வப்போது ஏந்திவரும்
எண்ணெய் அல்லது
மஞ்சள் கறையை..
அப்பா எழுதுவது
அலுவலகத்து மையில்
அவசரமாய்...
ஓரங்களில் கோடிட்டு
ஒழுங்காய் எழுதுவது
தங்கை..
அனைவரின் தகவலையும்
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக்
கூர்ந்து நோக்குகையில்
தெரிகின்றன
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .
http://youthful.vikatan.com/youth/gowripriyapoem15062009.asp
காணாமல் போனவை -2
10 June, 2009
பொம்மை

இடிபாடுகளில்..

*
தலைமுறைகள் கண்ட
தெருமுனை வீட்டை
இடிக்கத் தொடங்கியிருந்தார்கள்..
***
நெடுநாட்களாய் மண் கொணர்ந்து
சன்னலின் மூலையில்
கூடு செய்த குளவிக்கு
எவரும் அறிவிக்கவில்லை
அதன்வீடும் தகர்க்கப்படுவதை..
வழிதவறியதாய் வருந்தி
அடுத்தடுத்த வீடுகளில்
அலைந்தபடி இருக்கிறது
குளவி.
***
கோடையில் ஒருநாள் தனக்குக்
குடைபிடித்த குழந்தையுடன்
இன்னொரு சிநேகப் பொழுதை
எதிர்நோக்கி இருக்கிறது
வாசலருகில் வேப்பங்கன்று..
***
தலைமுறைகள் மாறுகையில்
தனை இரசிக்க எவருமற்று
தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
இறுதிவரை சொல்லவில்லை
நிலவு தன் நிலையை..
***
நிறைய மகிழ்ச்சியுடன்
நிறங்கள் தெரிவு செய்து
சுவரில் தான் வரைந்த
வண்ணத்துப் பூச்சிக்கு
சிறகொடிகையில்
வலித்திருக்குமென
புலம்பித் திரிகிறாள்
சிறுமியொருத்தி..
***
எதிர்வீட்டுக் கொடியில்
சிறுமியின் பாவாடையில்
சிவப்பாய்க் காய்கின்றன
இழைத்து நெய்யப்பட்ட
பட்டுப்புழுக் கூடுகள்.
*
......

02 June, 2009
கனவின் அல்லிப் பதியன்கள்
28 May, 2009
அழகு
கவனம்
27 May, 2009
ஒரு வானவில்லின் மரணம்

26 May, 2009
காணாமல் போனவை -1
23 May, 2009
காதலின் தூக்குமேடைகள்

வெற்றிட நிரப்பிகள்
ஊதா நிறப் பூக்களை
உதிர்த்திருந்த மரத்தை
பெருமழையொன்று
பெயர்த்தெறிந்த நாளில்
பிரிவறிவித்தாய் நீ...
மரம், மழை
நான், நீயென
காட்சிகள் குழம்பிய
அன்றிரவின் கனவில்..
விடுதலிலோ விடுபடுதலிலோ
விருப்பமற்றுக்
கவிதையின் மடியமர்ந்து
வெறுமையின் வெளிதனை
வெறித்திருந்தேன்..
விடியலில் ஓர்
பாடுபொருளுக்கான வெற்றிடம்
வெறுமை கொண்டே
நிரப்பப்படுகையில்..
எல்லோரும் அழைத்தாலும்
எனக்கு மனமில்லை
பெருமழையைப்
பேய்மழையென்றழைக்க.
http://youthful.vikatan.com/youth/gowripriyapoem25052009.asp
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1433
நன்றி: யூத்புல் விகடன், உயிர்மை
தேடல்


30 April, 2009
எதுகை தேடுங்கள்..

கருவுற்றிருக்கும் மயிலிறகு..
கசங்கியதோர் காகிதக்கப்பல்..
கடற்கரையில் கண்டெடுத்த
நட்சத்திர மீன்கூடு..
அழிப்பானின் மூலப்பொருளாய்
அறியப்படும் பென்சில்சீவல்..
மணலில் புரண்டெழுந்து
பேய்முடியீனும் காந்தத்துண்டு..
செந்நிறக் கிளிஞ்சலென
குல்மொஹர் இதழொன்று..
காணும் பொங்கலன்று
தாத்தா தந்த பத்துரூபாய்..
விழுகையில் உடைந்ததும்
உடையாது விழுந்ததுமாய்
முன்வரிசைப் பற்களிரண்டு..
மேசைக்கரண்டியினின்று
இடம்பெயராத எலுமிச்சைக்கு
பள்ளியில் தந்த பதக்கமொன்று..
யாவுமிருக்கும் பென்சில் பெட்டியைப்
பற்கள் கொண்டு நான்
பாங்காய்த் திறப்பதைப்
பரவசமாய்ச் சிலாகித்து
எழுதித் தீர்க்கும் நீங்கள்..
விலையுயர்ந்த மிட்டாயின்
வண்ணம் மங்கிய காகிதத்தை
மறவாமல் எழுதுங்கள்- அத்துடன்..
தனித்தென்னைத்
தின்னச் செய்கையில்
தாயின் கால்கள் பின்நின்று
வேலைக்காரியின் பிள்ளை
விழிமுனையில் சிந்திய
ஏக்கப் பார்வைக்கும்
எதுகை தேடுங்கள்..
வளர்ந்துவிட்ட உங்களுக்கு
வார்த்தை கிடைக்காமலா
போய்விடும்??
29 April, 2009
விழியற்றவனின் முகில்

21 April, 2009
மருதோன்றி இரவொன்றில்..

உள்ளங்கை மருதோன்றி
சிவந்திராத காலைகளில்
உடைந்தழும் என்னிடம்
பவழமல்லிக் காம்பும்
புலர்வானின் நிறமும்
அடர்சிவப்பினும் அழகென்று
ஆறுதல் சொன்னாய்...
பிரியங்கள் பிளவுண்ட இந்நாளில்
பின்னிரவின் உறக்கம் உறிஞ்சி
உலராதிருக்கும் மருதோன்றி
உன் நினைவின் ஈரங்களை
உள்ளங்கை நரம்புகளில்
ஓயாமல் எழுதுகையில்
தனித்திருக்கும் எதுவும்
நட்பாகிவிடுகிறதெனக்கு...
ஒற்றையாய் நட்டவன் மேல்
ஊமைக் கோபமும்..
விரிந்திடும் விதியற்ற
வேரின் வியர்வையும்..
தொட்டிச் செடியொன்றின்
பூவிதழில் துளிர்க்கிறது..
கொல்லைக் கிணற்றில்
கொதிக்கும் பாதரசமாய்க்
குழைந்து நெளியும் நிலவும்..
சிறுவர் வண்டியில்
சேர்க்கப்படாது
தனித்து மிதக்குமோர்
நுங்குக் குவளையும்..
தத்தம் வெறுமையைத்
தமக்குள் பகிர்கின்றன...
கடந்து போன பூனையின்
கால் எதையோ இடறிட..
அலைகள் மறுக்கப்பட்ட
ஆழியின் துயரத்தை
உப்பளத்து நீருமிழ்ந்த
உவர்ப்புத் துகள்கள்
உடைந்த குடுவையிடம்
உரத்துக் கூற....
மனதின் இறுக்கத்தில்
மறுகாது தப்பிட
நுணுங்கி விரியும்
நுரையீரல் பூக்களின்
நீள்மூச்சுக் கூட்டங்கள்
அளந்து தோற்கின்றன
இவ்விரவின் நீளத்தை..
வியப்புகள் கொணரும் விடியலில்..
காட்சிப் பிழையொன்றின்
சாத்தியங்கள் களைந்த பின்பும்
குங்குமமாய்ச் சிவந்திருந்த
கைகளுக்குள் அழுகிறேன்
அளந்திட ஏதுமற்று...
http://youthful.vikatan.com/youth/gowripriyapoem23042009.asp
நன்றி: விகடன். காம்
19 April, 2009
வலி
புதிதும் பழையதும்
என்னைப் பெற்றவளின்
ஏழாவது பிள்ளை என்
இடுப்பிருந்து நழுவுகையில்
சிவப்பொளிக்குப் பணிந்தது
சீறி வந்த மகிழுந்து..
சாலையை வெறித்த மனிதர்
சட்டைப்பைக்குள் கைவிட
சட்டெனப் பூத்ததென் மனது.
"இவரும் இவரைப்போல்
இன்னும் நாலு பேரும்
இரக்கம் கொண்டு ஈந்திட்டால்
இரண்டு நாள் உலர்ந்த வயிறு
ஈரம் கண்டு உறங்கப் போகும்"
ஏளனப் புன்னகையுடன்
எதையோ அவரெடுத்து
இதழிடுக்கில், விரலிடுக்கில்
வைத்தெடுத்து, புகைவிடுத்து
விளையாடத் தொடங்குகையில்...
புதிதாய் உணர்ந்து கொண்டேன்
புகையிலை கருகும் வாசம்- உடன்
புன்னகை கருகும் வாசமும்...
பின்னது எனக்குப் புதிதல்ல.
மழைக்கனவு

மழலைக் குரல் தாங்கி
தூறல் தரையிறங்கும் வேளை
15 April, 2009
கடல்சாரா நெய்தல்

03 April, 2009
..........

01 April, 2009
வெங்காயம் சமையலுக்கில்லை

துருவிய தேங்காய் ஏனோ
தும்பைகள் பூத்த புல்வெளியாய்த்
தோன்றிய நொடியில்தான்
வாணலியின் விளிம்புகள் தாண்டி
வந்து குதித்ததொரு கவிதை..
அடுக்களை வெறுத்து
அடைக்கலம் ஆனது
அழிப்பான் உற்பத்திக்கு
அன்புமகள் சேகரிக்கும்
கூம்புகளாய்ச் சுருண்டிருந்த
பென்சிலின் துருவலுக்குள்....
அலுவலகக் கவலைகளில்
அமிழ்ந்திருந்த இரவில் மீண்டும்
ஆள்காட்டி விரல் வந்து
அமர்ந்திருந்த கவிதை
"எப்போது என்னை
எழுதுவாய்" என்றதும்
ஐந்தறைப் பெட்டிக்குள் அதை
அலுப்புடன் அடைத்தேன்..
அடுத்த விடியலின்
அவசரப் பொரியலில்
அவரையுடன் தீய்ந்தன என்
கவிதைத் துருவல்கள்...
பிழை எனதுதான்..
பென்சில் பெட்டியில் அது
பிழைத்திருக்கக் கூடும்..
விழிநீரின் காரணம்
விளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன்.
27 March, 2009
பிழைபொறுத்தல்

24 March, 2009
உதிர்ந்து போன உவமைகள்
22 March, 2009
...

தேய்பிறைகள் தித்திக்கும்

இன்னுமொரு பாடுபொருள்
நிலையாமை இனிக்கவும் கூடும்

முறித்திடும் மென்மைச் சோம்பலில்..
கனவில் சிலநொடி கடவுள் வருகையில்
களித்திடும் சிசுவின் சிரிப்பில்..
மழலை விரல்கள் மையிட்டெழுதும்
மரப்பாச்சி பொம்மையின் பொட்டில்..
மார்கழிக் கோலத்துப் பரங்கிப் பூவின்
மடியில் தேங்கிடும் மழையில்..
வெயிலெனும் கோடரி மழைத்துளியுடைக்க
வெகுதூரத்து வானவில் காட்டும்
வெள்ளொளியின் வர்ணப் பிளவில்..
பெருநெல்லியின் கருப்பை திறந்து
பின்நாக்கில் பிறக்கும் இனிப்பில்..
காற்றுச் சிற்பியின் கலைவண்ணத்தில்
நொடிக்கொரு வடிவுறும் முகிலில்..
உடையத் தெரிந்தும் உடையாதிருக்கும்
ஊடல் நீரின் மௌனக்குமிழியில்..
கடுங்குளிர் இரவின் கவிதை முரணாய்
கண்ணாடிச் சன்னலின் வியர்வையில்..
நிலையாமை வலிப்பதில்லை
பாடுபொருட்களின் வாழ்க்கைக்குறிப்பில்..
ஓர் ஓவியம், ஒரு கவிதை

சட்டென வீடாய் மாறிட..
வடிவம் பெற்றன மக்களாய்..
நாலரை வயது மழலைக்கிறுக்கலில்
மேகங்களும் சில கூடின..
மழலையின் ஓவிய முகில்கள் திறந்து
மழைவரும் நொடியில் கவிசெய
மனமேங்கிக் காத்திருந்தேன்...
நேற்றைய மழையில் ஆடியபோது
கதவடைத்துக் கத்திய தன் தாயின்
நினைவுடன் நின்றுபோனது ஓவியம்.
மழலைவானம் மழை காணவில்லை..
கனவுக் கருவறைக்குள்
கார்முகில்துளி கால்பதிக்கையில்
கவிதைக் குழந்தைக்காய்
களிப்புடனே காத்திருந்தும்
கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு
கசங்கிப்போயின என் காகிதங்கள்...
பெரியவர்களின் முகில்களும்
பெய்யாமல் கலைந்தன...