இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்
செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை.
இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்
செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை.
பூக்களை மட்டுமே
புகைப்படம் பிடிப்பவன்
கடல் பார்த்துத் திரும்புகிறான்
ஒற்றை அலையின் படத்துடன்.
மலர்ந்த நாகலிங்கத்தின்
மகரந்த முக்காடு போல்
ஒயிலாய் வளையும் ஒற்றை அலை.
கடலினுள் இறங்கும் கதிரவனின்
செம்மஞ்சள் பூசிச் சிதறும்
மகரந்தத் துகள்களென
நீர்த்துளிகள்.
ஆழியை மடித்து மடித்து
அல்லிவட்ட இதழ்கள் செய்யும்
ஓரிகாமி அறிந்த
சிறுமி இக்கவிதை.
நன்றி: யாவரும்.காம்