06 July, 2014

காக்கைக் கூட்டின் இழைகள்

விரியும் வயிற்றின் வரிகளை
வெறித்துத் தீர்க்கும் வாடகைத்தாய்,
பிறழ் மனதின் வெளியெங்கும்
பிய்த்தெறிந்து திரிகிறாள்
கருங்குயிலின் மகவு ஏந்திய
காக்கைக் கூட்டின் இழைகளை

மங்கும் வெண்ணிறக் கதைகள்

உருண்டுழலும் அலை வயிற்றில்
ஒற்றைக் கிளிஞ்சலென....

வளைந்த சருகின் முதுகில்
வசித்து விலகிய பூச்சியின் கூடென..

இருந்த இருப்பை
இரையாது கதைக்கும்
கூண் கிழவியின் புரைக்கண் வெண்மை.