தூறல்வெளி
இடைநிகழ் வெண்ணிலாக்கள்
19 October, 2010
இறுதிச் சொல்
ஒன்றை மூன்றாக்கியது
உடம்பு சுடாத சிறுவெயில்.
கவிதையொன்று ஜனித்ததைக்
காகிதத்தில் குறித்தேன்..
இரண்டை வளைத்து
ஒன்றில் வசிக்க
இளமழை தொடங்கிய வேளையில்
ஈரமாய் முடியட்டுமென
இறுதிச்சொல் தேடினேன்..
வேறொன்றை ஏழாக்கி
வானில் கிடத்தின
வெயிலும் மழையும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)