20 January, 2021

ஆழியின் மகரந்தம்

                                                         

 

பூக்களை மட்டுமே 

புகைப்படம் பிடிப்பவன் 

கடல் பார்த்துத் திரும்புகிறான் 

ஒற்றை அலையின் படத்துடன். 


மலர்ந்த நாகலிங்கத்தின் 

மகரந்த முக்காடு போல் 

ஒயிலாய் வளையும் ஒற்றை அலை.


கடலினுள் இறங்கும் கதிரவனின் 

செம்மஞ்சள் பூசிச் சிதறும் 

மகரந்தத் துகள்களென 

நீர்த்துளிகள். 


ஆழியை மடித்து மடித்து 

அல்லிவட்ட  இதழ்கள் செய்யும் 

ஓரிகாமி அறிந்த 

சிறுமி இக்கவிதை. 


நன்றி: யாவரும்.காம் 


No comments:

Post a Comment