15 November, 2021

விட்டு விடு


 

தம்பி!!!
விட்டு விடுவாயா..
எதை அஞ்சியோ
சுருண்டிருக்கும் மரவட்டையை
குச்சியால் நகர்த்துவதை..
கேரம் வில்லை போல்
சுண்டிப் பார்ப்பதை..
எனக்கு
விண்மீன்களைத்
தன்னுள் அடுக்கி
மௌனமாய்ச் சுழன்றிருக்கும்
பால்வெளியின் அச்சு பிசகி
பிரளயம் வருவது போல்..
நடுக்கமாய் இருக்கிறது

No comments:

Post a Comment