10 November, 2021

ஒற்றைச் சொல்


 


மனதின் நிலைக்கேற்ப
மாறி விடுகிறது
மழை விழும் நீர்ப்பரப்பு.

வட்டத்தின் வெளியே
நின்று பார்த்தால்
மதுரக் காதலுறு
மணப்பெண்ணின்
மயிர்க்கூச்சம்.

வட்டத்தின் உள் நின்று
வெறித்தால் அது
போதையுற்றவன்
பிறழ்நிலையிற் பொறித்த
ப்ரெய்லிக் காகிதம்.

வட்டம் என்பது வட்டமல்ல
மனம் சூம்பும் வண்ணம்
எவரோ செய்த செயல்.
பல வேளைகளில் அது
ஒற்றைச் சொல்.

No comments:

Post a Comment