10 November, 2021

ஆட்கள் தீர்ந்து போன அறை


 

வண்ணப் பொடிகள்
தீர்ந்து போகும் காலைகளில்
குறுக்கும் நெடுக்குமாய்
சரசரவென இழைகள் வரைந்து
கோலத்தின் பூவிதழ்களை
நிரப்புவாளாம் பாட்டி.

இன்றும் அப்படித்தான்..
ஆட்கள் தீர்ந்து போன
அறை ஒன்றினுள் அமர்ந்து
இழைத்துக் கொண்டிருக்கிறாள்
சொற்களை.

No comments:

Post a Comment