08 December, 2021

மீண்டும்


 


நீரின் மேல் படரும்
ஒளியின் ஆயிரம்
அடவுகள்.
அசையாது அசையும்
அடியில் தங்கிய
கரும்பாறை.
சறுக்கி நகரும்
பாலே கலைஞனென
குளத்துக்குள் நழுவும்
கரையில் ஓடுலர்த்திய
ஆமை.

No comments:

Post a Comment