13 August, 2021

வாடாமல்லியும் தொட்டாற்சிணுங்கியும்


வாடாமல்லிகள் பூக்கின்றன

எவரின் பார்வையும்

தப்ப இயலாத

அடர்நிறத்தில்..

சற்றே கனமாய்..


தொட்டாற்சிணுங்கிகளும் பூக்கின்றன

கவனம் கோராத

அதே நிறத்தில்..

அத்தனை இலகுவாய்..


ஒரு வாடாமல்லியை

உணர்ந்து கொள்ள

கவனம் முழுவதையும்

கட்டை விரலில் 

குவித்தல் வேண்டும்.


தொட்டாற்சிணுங்கிப் 

பூவுக்குப் போதும்

ஒரு பூனைக்கான 

மென்வருடல்.


முன்னதுடன் எனக்குத் 

தோன்றும் ரசனை.

பின்னதுடனோ ஒரு

பெரும் சினேகம்.

No comments:

Post a Comment