29 October, 2021

....

 இரண்டு வயதில்

கட்டிலின் அடியில்

ஒளிந்து கொண்டவள்
"அம்மா நான் இங்க இல்லை" என்றாள்.

நான்கரை வயதில்
"நான் கதவுக்குப் பின்னால்
ஒளிஞ்சுக்கறேன்.
நான் இப்போ சொன்னதை மறந்துட்டுத் தேடுங்க" என்றாள்.

ஆறரையில் தோழிகளுடன்
விளையாட்டுக் கூடாரத்துள்
சப்தமின்றி
ஒளியக் கற்றாள்.

ஒருபோதும் அவளைக்
கண்டுபிடித்ததில்லை.

நானறிவேன்,
ஒளிய நினைக்கையில்
ஒளிதலுக்கும்
தொலைய முற்படுகையில்
தொலைதலுக்கும்
பெரியவர்களின் உலகில்
இடமில்லை.

இருக்கவே இருக்கிறது
முகநூல் கணக்கை
முடக்கிக் கொள்வதும்,
விமானப் பயன்பாட்டு முறைக்கு
அலைபேசியை மாற்றுவதும்.

No comments:

Post a Comment