
பருத்தியல்லாத ஒன்றைப்
பருத்தியெனச் சொல்லிவிட்ட
நடைபாதை வணிகனை
ஏசாமல்தான் விடுங்களேன்..
எதிர்ப்புகளேதும் தெரிவிக்காத
எளியவன் அவன்..
பருத்தியெனச் சொல்லிவிட்ட
நடைபாதை வணிகனை
ஏசாமல்தான் விடுங்களேன்..
எதிர்ப்புகளேதும் தெரிவிக்காத
எளியவன் அவன்..
சற்றேனும் மென்மையற்ற
உயிர்த்தலும் உதிர்தலுமற்ற
இலையல்லாத இலைகளை
எந்நேரமும் முட்டியலையும்
உங்கள் செல்ல மீன்குஞ்சினைப் போலவே
மிக எளியவனவன்.