30 January, 2010

வீழ்ந்தெழுந்தது


வன்மழைக்குச் சாய்ந்திருந்தது
வழியோரத்து மரம்
இறுதிச் சருகையும் நீத்து..


காலுடைந்த காற்றாடியுடன்
கிளைநுனி பிணைத்தவன்
சில்லென்ற காற்றெங்கும்
சிந்தியபடி சென்றான்
சின்னஞ்சிறு புனைவுகளை...


அன்றைய கனவில்
பூத்துச் சுழன்றது மரம்
கரும்பச்சை, மஞ்சள் மற்றும்
வாடாமல்லி நிறங்களில்.

8 comments:

  1. கவிதை அழகு.. :-))

    ReplyDelete
  2. தூறல்வெளி.. :)

    ReplyDelete
  3. கிளையொன்றிலிருந்த கூட்டில்
    இன்னும் சில பிறைத்தலுக்கு
    காத்திருந்த முட்டைகள் சிவந்த வேர்களுடன்
    டார் சாலை கருமையில் மஞ்சள் குமிழ்
    படர்த்தி

    என்று தொடர தோன்றுகிறது

    நல்ல கவிதை :)

    ReplyDelete
  4. ந‌ல்ல‌ க‌விதை வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  5. குளிர்ந்த சொற்க்களின் வறட்சி...
    நன்றாக இருந்தது...
    இன்னும் ஏக்கத்தை மிகைபடுத்தி இருக்கலாம்...

    ReplyDelete
  6. மிக நல்ல கவிதை அடர்த்தியான எழுத்து...மீண்டும் மீண்டும் படிக்க சொல்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    ReplyDelete
  7. அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete