20 January, 2021

பேரமைதியைப் புசிக்கும் புறா


பேச யாருமற்ற
பிறழ் மனசுக்காரி
சன்னலருகில் வைத்தலுண்டு
மௌனத்தில் புரட்டிய
நெல்மணிகளை.

செம்மஞ்சள் பெருவட்டத்துள்
சின்னதொரு கருவட்டமாய்
வீட்டுப்புறாவின் விழியில் சுழலும்
தகித்துத் தீர்ந்த 
தாரகையின்
கருந்துளை.

பிரபஞ்சத்தின்
பேரமைதியை அது
கொத்தி விழுங்குகையில்
பட்டுக் கழுத்தில் ஒளிரும்
இளஞ்சிவப்பு, ஊதா மற்றும்
கரும்பச்சையில்
துருவ ஒளி.

நன்றி: தமிழ்வெளி இதழ் 

No comments:

Post a Comment