19 May, 2019

ஒற்றைச்சரம்


விபத்தின் பின்வரும் கோடையில்
வீட்டுச்சிறை வாய்க்கிறது
நமக்கு.
சன்னல்கள் யாவையும் அடைத்தபின்
இயக்குகிறாய்
மெலிதாய் ஒளிரும்
ஒற்றைச்சர விளக்கை.
இருளினூடும் ஒளியினூடும்
தடுமாறும் தருணமொன்றில்
ஒளிச்சரம் குறிக்க
நிகழ்கிறது
அட்டகாசம் என்ற சொல்லின்
உனது முதல் பிரயோகம்.
இத்தனை பெரிய உலகும்
இத்தனை ஒளிரும் பகலும்
இத்தனை பழகிய மொழியும்
விடுத்தமைகிறேன்
உனது சிற்றறைக்குள்..
உனது சிற்றொளிக்குள்..
உனதொற்றைச் சொல்லுக்குள்.

No comments:

Post a Comment