08 February, 2019

..


அம்மாவும் அப்பாவும் 
அருகிலற்ற பொழுதுகள் 
அத்துணை தனிமையில்லை 
இந்நாட்களில்!

பெருநகரத்தின் உயிரற்ற
சனிக்கிழமை யொன்றில்
பாண்டி விளையாடப்
பழகிவிட்டாள் இனியா,
அடுக்ககத்துச் சுவர்களின்
அடுத்தடுத்த செவ்வகங்களில்
அலைந்து கிடக்கும்
பகல் நிலவுடன்!

No comments:

Post a Comment