20 March, 2011

...


நிறமிகள் மரித்த
இரவின் வெளியை
நிரப்பத் துவங்குகிறது
நிறமற்ற பெருமழை.
இந்நொடிவரை
ஒளியுமிழ்ந்த தெருவிளக்கு
உதிர்க்கத் துவங்குகிறது
பொன்சிறகு தரித்த
மின்மினிகளை.

10 comments:

  1. கவிதை அருமை.. :-)

    ReplyDelete
  2. அழகாய் விவரித்திருக்குறீர்கள் கவிதை அருமை


    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. அழகிய சொல்லோவியங்களால் அணிகள் சேர்த்து படிமத்தால் கவிதையைப் படைத்திருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  4. .
    .
    .
    சரியா? :)

    ரம்மியமான கணம் ... ரசனைக்குரிய கவிமொழி...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிமையான கவிதை ரசனையான மனிதர் ஆயிரம் ஆயிரம் மின்மினிகளின் வாழ்துகள்

    ReplyDelete
  6. வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
    நன்றி பகிர்வுக்கு.....

    ReplyDelete
  7. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete