09 September, 2019

பிள்ளையார்களின் கடல்




குறு முகவாய் தொட்டு
மரத்தோள் தடவி
படகினைத் தள்ளும்
மீனவன் விரலில்
மத்தகம் வருடிப் பின்
முதுகிலேறும் பாகனின் பரிவு.

கரை நீங்கிக் கடலேகும் படகுக்கோ
மண்டியிட்டெழுந்து முன்நகரும்
யானையின் துதிக்கைத் துள்ளல்..

களிறாகிப் படகாகிக்
கடல் நீந்தி முதல்நாடும்
கரிமுகத்தில் ஒரு
பெரும்பரிவின் துள்ளல்.

3 comments: