15 December, 2009

சிறுமிகள் விழுங்கும் சூரியன்கள்


வழியோரத்து நீர்நிலைகளில்
வண்ணங்குழைத்தபடியோ
தொலைவிருக்கும் பனைகளின்
தலை யுரசியபடியோ
நீலத்தினூடே செவ்விழைகளை
நெய்து திரிந்தபடியோ
தொடர்வண்டிப் பயணங்களில்
துவளாது உடன்வந்தும்..
நிலவுடன் ஒப்பிடுகையில்
கதிரவன் என் கவிதைகட்கு
அந்நியந்தான்..

பயணத்தில் ஜனிக்கும் இவ்விடியலில்
அருகருகிலிருக்கும் இரு முகில்களில்
ஒன்றைத் தனதென்றும்
மற்றொன்றை யெனதென்றும்
மழலைப் பிரகடனம் செய்கிறாள்
எதிர் இருக்கைச் சிறுமி..

ஒட்டியவை போலிருக்கும்
பிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின்
சிரித்தபடி செப்புகிறாள்
சூரியனை விழுங்கியதாய்..

எமதிரு முகில்களிடை
இயல்பாய் ஒட்டிக்கொண்ட
சூரியனைப் பிரித்தெடுத்து
விழுங்கத் தொடங்குகிறதொரு
கவிதை.

நன்றி- உயிரோசை

16 comments:

  1. //ஒட்டியவை போலிருக்கும்
    பிஸ்கட்டுகளைப் பிரித்து
    இடையிருக்கும் செம்மஞ்சள்
    வட்டத்தை விழுங்கிப் பின் //

    அழகு.. :-))

    ReplyDelete
  2. //எமதிரு முகில்களிடை
    இயல்பாய் ஒட்டிக்கொண்ட
    சூரியனைப் பிரித்தெடுத்து
    விழுங்கத் தொடங்குகிறதொரு
    கவிதை.//


    அருமை

    ReplyDelete
  3. ஒட்டியவை போலிருக்கும்
    பிஸ்கட்டுகளைப் பிரித்து
    இடையிருக்கும் செம்மஞ்சள்
    வட்டத்தை விழுங்கிப் பின்

    Excellent !!!!

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி :)

    ReplyDelete
  5. Thirumba elutha arambichuteengala...super...romba naala (online)padikkurathaye vittutu ippo than thriumba arambichuten... SUPER POEM GOWRY..!!!

    ReplyDelete
  6. ”விழுங்கிப் பின்
    சிரித்தபடி செப்புகிறாள்
    சூரியனை விழுங்கியதாய்..”
    ரியல்லி சூபர்ப்... தொடரட்டும்...

    ReplyDelete
  7. ரொம்ப பிடிச்சிருக்கு..வெல்கம் பேக் :-)

    ReplyDelete
  8. Hello Eppo adutha Post poduveenga..Adikkadi Refresh panni parthutte iruken... :-(

    ReplyDelete
  9. ரொம்ப நல்லாயிருக்கு

    ReplyDelete
  10. //ஒட்டியவை போலிருக்கும்
    பிஸ்கட்டுகளைப் பிரித்து
    இடையிருக்கும் செம்மஞ்சள்
    வட்டத்தை விழுங்கிப் பின்
    சிரித்தபடி செப்புகிறாள்
    //

    அழகு

    ReplyDelete
  11. வட்டத்தை விழுங்கிப் பின்
    சிரித்தபடி செப்புகிறாள்
    சூரியனை விழுங்கியதாய்..
    *எமதிரு முகில்களிடை
    இயல்பாய் ஒட்டிக்கொண்ட
    சூரியனைப் பிரித்தெடுத்து
    விழுங்கத் தொடங்குகிறதொரு
    கவிதை.

    அருமை

    ReplyDelete
  12. ரொம்ப நல்லாருக்குங்க..

    ReplyDelete