19 April, 2009

வலி



மழையாடி உயிர் நனைந்த

மழலையிடம் சினங்கொண்டு

கதவடைத்த பெற்றோர்முன்

மனம் வெதும்பிய பிள்ளையின்

கடைவிழிநீர் காணும்வரை

குடைக்கம்பிகள் குத்தியதும்

வலித்ததில்லை மழைக்கு..

நானறிவேன்,அன்று முதல்

எவருமறியாமல் வந்து

இரவுகளின் வெறுமை மட்டும்

இருட்டில் நனைக்கிறது மழை..

4 comments:

  1. பசுமை நிறைந்ததாய் இருக்கிறது தூறல்வெளி...
    மெல்லியதாய் வலி நிறைந்திருக்கிறது கவிதைகளில்
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்

    ReplyDelete
  3. //குடைக்கம்பிகள் குத்தியதும்

    வலித்ததில்லை மழைக்கு..//

    அருமை...

    ReplyDelete
  4. நன்றிகள் பல புதியவன்

    ReplyDelete