19 October, 2010

இறுதிச் சொல்

ஒன்றை மூன்றாக்கியது
உடம்பு சுடாத சிறுவெயில்.
கவிதையொன்று ஜனித்ததைக்
காகிதத்தில் குறித்தேன்..

இரண்டை வளைத்து
ஒன்றில் வசிக்க
இளமழை தொடங்கிய வேளையில்
ஈரமாய் முடியட்டுமென
இறுதிச்சொல் தேடினேன்..

வேறொன்றை ஏழாக்கி
வானில் கிடத்தின
வெயிலும் மழையும்.